sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்

/

மகள் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்

மகள் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்

மகள் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்


ADDED : ஜூலை 25, 2024 06:08 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி அருகே பெரியகண்ணாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ், 30; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சந்திரலேகா, 27; இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் கணவரிடம் சந்திரலேகா கோபித்துக் கொண்டு புவனகிரி அருகே வல்லம் கிராமத்தில் உள்ள தந்தை அமிர்தலிங்கம் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இரண்டு நாட்கள் முன்பு அங்கு சென்ற சிவப்பிரகாஷ், மனைவி சந்திரலேகாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சந்திரலேகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அமிர்தலிங்கம், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சந்திரலேகாவிற்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆவதால், வரதட்சணை கொடுமையாக இருக்குமோ என, கடலூர் ஆர்.டி.ஒ. அபிநயா விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us