sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே லட்சியம் துறையூர் ஊராட்சி தலைவர் பேட்டி

/

மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே லட்சியம் துறையூர் ஊராட்சி தலைவர் பேட்டி

மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே லட்சியம் துறையூர் ஊராட்சி தலைவர் பேட்டி

மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே லட்சியம் துறையூர் ஊராட்சி தலைவர் பேட்டி


ADDED : ஜூலை 13, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: துறையூர் ஊராட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என ஊராட்சி தலைவர் அமுதா ராயதுரை தெரிவித்துள்ளார்.

பெண்ணாடம் அடுத்த துறையூர் ஊராட்சியில் நான் பொறுப்பேற்ற பின் ஊராட்சி நிதி, ஒன்றிய கவுன்சிலர் நிதி, ஒன்றிய பொது நிதி, மாவட்ட கவுன்சிலர் நிதி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, முதலமைச்சரின் நிதி உட்பட அரசின் பல்வேறு திட்ட நிதியை பெற்று ஊராட்சியை மேம்படுத்தி வருகிறேன்.

அதன்படி, துறையூர் காலனியில் புதிய மேல்நிலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. சுடுகாடு பகுதியில் போர்வெல் வசதி, எம்.எல்.ஏ., நிதியில் சாலை, பேவர் பிளாக் சாலை, சேவை மையம் கழிவறை புனரமைப்பு, நுாலகம் தினசரி திறப்பு, காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.

மெயின்ரோடு பகுதியில் மினிடேங்க், செந்துார் வடிவேலன் நகரில் புதிய போர்வெல், சாலை வசதி, மேட்டுத்தெருவில் புதிய மின்மோட்டார். புதிதாக அங்கன்வாடி மையம் கட்டடம், அரசு பள்ளிக்கு புதிய கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துறையூர் ஊராட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே என் லட்சியம் என ஊராட்சி தலைவர் அமுதா ராயதுரை தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us