sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போ லீசாரை நெளியவைத்த எம்.எல்.ஏ.,

/

போ லீசாரை நெளியவைத்த எம்.எல்.ஏ.,

போ லீசாரை நெளியவைத்த எம்.எல்.ஏ.,

போ லீசாரை நெளியவைத்த எம்.எல்.ஏ.,


ADDED : ஜூலை 23, 2024 11:18 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 69 பேர் பலியானதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம், கஞ்சா, கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் அடங்கிய விழுப்புரம் சரகத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த போலீசார் வேலுார் சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், விருத்தாசலத்தில் டாஸ்மாக் பார் நடத்தும் கட்சி பிரமுகர் ஒருவரின் காரை, போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர்.

இது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

பார் உரிமையாளருடன் போலீஸ் நெருக்கத்தை அறிந்த எஸ்.பி., சம்மந்தப்பட்ட நபரை கைது செய்யவும் உத்தரவிட்டார். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணியில் அமைச்சருடன் அவர் ஐக்கியமாகியதால், போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினர்.

இந்நிலையில், மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், புவனகிரி எம்.எல்.ஏ.,வுமான அருண்மொழிதேவன், பார் உரிமையாளருடன் போலீசாரின் நட்பு குறித்து காரசாரமாக பேச, அங்கிருந்த போலீசாரை நெளிய வைத்தது.






      Dinamalar
      Follow us