ADDED : ஜூலை 23, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் மற்றும் அனைத்து வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
டிஜிட்டல் கிராப் சர்வே பணியை சரியாக செய்யவில்லை எனக் கூறி எந்த விளக்கமும் கேட்காமல் தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்த கடலுார் ஆர்.டி.ஓ., வை கண்டிப்பது. பணியிடை நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றிரவு 7:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.