ADDED : ஜூன் 16, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பாலுார் அருகில் புதுச்சேரி சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு போலீசார் பாலுார் அடுத்த சன்னியாசிப்பேட்டை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சன்னியாசிப்பேட்டை பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் சோதனை செய்தனர். அங்கு காந்தி நகரை சேர்ந்த தமிழரசி,50; தமது வீட்டு அருகே 20 லிட்டர் புதுச்சேரி சாராயம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து தமிழரசியை கைது செய்தனர்.