/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., வேலை வாய்ப்பில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை நெய்வேலியில் பா.ஜ., மாநிலத் தலைவர் வலியுறுத்தல்
/
என்.எல்.சி., வேலை வாய்ப்பில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை நெய்வேலியில் பா.ஜ., மாநிலத் தலைவர் வலியுறுத்தல்
என்.எல்.சி., வேலை வாய்ப்பில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை நெய்வேலியில் பா.ஜ., மாநிலத் தலைவர் வலியுறுத்தல்
என்.எல்.சி., வேலை வாய்ப்பில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை நெய்வேலியில் பா.ஜ., மாநிலத் தலைவர் வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2024 06:09 AM

நெய்வேலி :'என்.எல்.சி.,யில் அடுத்த 4 ஆண்டுகளில் கிடைக்கப் பெறும் 4,036 புதிய பணியிடங்களில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, பா.ஜ., அண்ணாமலை பேசினார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலியில், யாத்திரை மேற்கொண்ட பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
என்.எல்.சி., மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், இப்பகுதி இளைஞர்களுக்கு சொன்னதை செய்ய வேண்டும். நெய்வேலியை சுற்றியுள்ள கிராம மக்களின் விவசாய நிலங்களை எடுத்துதான் என்.எல்.சி.,யை உருவாக்க முடிந்தது.
இங்கு உற்பத்தியாகும் 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கும், மீதி பக்கத்து மாநிலங்களுக்கும் செல்கிறது.
என்.எல்.சி.,யில் அடுத்த 4 ஆண்டுகளில் கிடைக்கப் பெறும் 4,036 புதிய பணியிடங்களில் வீடு, நிலங்களை கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மத்திய அரசு நிறுவனம் மக்களுக்காக இருக்க வேண்டும்.
ஆனால் அந்நிறுவனம், இங்குள்ள தி.மு.க.,வி னருக்காக நடந்து கொண்டிருக்கிறது.என்.எல்.சி., பிரச்னைகள் தொடர்பான 7 கோரிக்கைகளை, மத்திய அரசுக்கு அனுப்பி, அவற்றுக்கு விரைவில் தீர்வு காண்போம்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

