sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக செயல்படுகின்றனர்: விருத்தாசலத்தில் பா.ஜ., மாநிலத் தலைவர் காட்டம்

/

தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக செயல்படுகின்றனர்: விருத்தாசலத்தில் பா.ஜ., மாநிலத் தலைவர் காட்டம்

தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக செயல்படுகின்றனர்: விருத்தாசலத்தில் பா.ஜ., மாநிலத் தலைவர் காட்டம்

தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக செயல்படுகின்றனர்: விருத்தாசலத்தில் பா.ஜ., மாநிலத் தலைவர் காட்டம்


ADDED : ஜன 27, 2024 06:46 AM

Google News

ADDED : ஜன 27, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: 'தமிழகத்தில் தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக உள்ளனர்' என பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண்; என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவர், நேற்று கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வருகை தந்து, கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முன் பாதயாத்திரையை துவக்கினார். விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடைவீதி வழியாக சன்னதி வீதியில் முடிவடைந்தது.

அங்கு அவர் பேசியதாவது:

தமிழகத்தில் மாற்றம் கேட்டு வந்த விஜயகாந்த்தை தேர்வு செய்த தொகுதி விருத்தாசலம். ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போது, மாற்றம் கேட்டு வருபவர்களை அரவணைப்பது இந்த தொகுதி. ராமேஸ்வரத்தில் நான் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்த இந்த யாத்திரை, வரும் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக இந்த லோக்சபா தேர்தல் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக உள்ளனர். தவறு செய்தால் தி.மு.க., ஊராட்சி தலைவரை கூட கேள்வி கேட்க முடியாது. அந்த அளவிற்கு அடாவடியாக செயல்படுகின்றனர்.

காமராஜருக்குப் பிறகு இவர்கள் கொட்டத்தை அடக்க விஜயகாந்த் வந்தார். ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை. அவர் இருந்தவரை அரசியல் கட்சியினரும், பத்திரிக்கையாளர்களும் அவரை வசைபாடினர். அவர் இறந்த பிறகு நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

தி.மு.க., கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் இதுவரை 20 கூட நிறைவேற்றவில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் 99 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுகிறார். தமிழகத்தில் உள்ள 33 அமைச்சர்களில் 11 அமைச்சர்களின் மீது ஊழல் வழக்கு உள்ளது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலை சோழ பேரரசின் ராணி செம்பியன் மாதேவி, கண்டராதித்தன் கட்டினர்.

இது சோழப் பேரரசின் படை நிற்கும் இடம். மணிமுத்தாற்றில் குளித்துவிட்டு மூலவரை பார்த்தால் நாம் காசிக்கு சென்று புனித நீராடி அங்கிருக்கும் சிவனை பார்த்ததற்கு சமம்.

ஆனால் துப்பு கெட்ட இந்த ஆட்சியில், கோவிலின் தெப்பக்குளத்தை கூட சுத்தப்படுத்த முடியவில்லை. கோவிலில் இருந்து காணாமல் போன அர்த்தநாரீஸ்வரர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்தது மீட்டு வந்தவர் பிரதமர் மோடி.

மோடியை பிரதமராக அமர வைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தொண்டர்களும் முடிவெடுத்து விட்டனர்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.






      Dinamalar
      Follow us