/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீத்தாம்பாளையத்தில் மருத்துவ முகாம்
/
தீத்தாம்பாளையத்தில் மருத்துவ முகாம்
ADDED : ஜன 17, 2024 01:44 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வேளாண் புலம் தோட்டக்கலை மாணவர்கள் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல, தோட்டக்கலை இறுதியாண்டு மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் மூலம், சிதம்பரம் அடுத்துள்ள தீத்தாம்பாளையம் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தனர்.
முகாமில், குழு மாணவிகள் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர். பு.முட்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜானகி தலைமையில் மருத்துவ குழுவினர், விவசாயிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்விற்காக அடிப்படை விஷயங்கள் குறித்து, விவசாயிகளுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

