sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் திருட்டு, மது விற்பனை: புவனகிரி அருகே 4 பேருக்கு வலை

/

மணல் திருட்டு, மது விற்பனை: புவனகிரி அருகே 4 பேருக்கு வலை

மணல் திருட்டு, மது விற்பனை: புவனகிரி அருகே 4 பேருக்கு வலை

மணல் திருட்டு, மது விற்பனை: புவனகிரி அருகே 4 பேருக்கு வலை


ADDED : ஜன 27, 2024 06:18 AM

Google News

ADDED : ஜன 27, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே மணல் திருட்டு மற்றும் மது பாட்டில் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

புவனகிரி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கீரப்பாளையம் முருகன் கோவில் தெருவில் 2 பேர், பைக்கில் கடத்திச் சென்று மணல் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.

போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது,8 மணல் மூட்டைகள் மற்றும் பைக்கை போட்டு விட்டு தப்பியோடினர்.

விசாரணையில், மணல் கடத்தியது கீரப்பாளையம் இளஞ்செழியன் மற்றும் அசோக் என தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், புவனகிரி பங்களா அருகே மேல்புவனகிரி அண்ணா நகர் நடராஜன், கீரப்பாளையம் அம்சாயால் ஆகிய இருவரும் மது பாட்டில் விற்றது தெரியவந்தது. போலீசை பார்த்ததும் இருவரும் தப்பியோடினர்.

போலீசார், 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us