ADDED : ஜன 17, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி அம்பிகா, 52; இவர், கடலுார் சப் ஜெயில் ரோட்டில் கூழ் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு உதவியாக மகன் பாபு, 27; இருந்துள்ளார்.
இவர், கடந்த 10ம் தேதி வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

