/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணை தாக்கிய தந்தை, மகனுக்கு வலை
/
பெண்ணை தாக்கிய தந்தை, மகனுக்கு வலை
ADDED : பிப் 06, 2024 04:44 AM
விருத்தாசலம், : முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடியை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி செல்வராணி, 32; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் ஜெய்சங்கர் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 31ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது, செல்வராணியின் வீட்டின் முன்பு இருந்த குடிநீர் குழாயை ஜெய்சங்கர் உடைத்தார். இதை தட்டிக்கேட்ட செல்வராணியை, ஜெய்சங்கர் அவரது மகன் சந்திரகுமார் ஆகியோர் திட்டி தாக்கியுள்ளார். காயமடைந்த செல்வராணி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கம்மாபுரம் போலீசார் ஜெய்சங்கர், அவரது மகன் சந்திரகுமார் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.