sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதங்களில் 116 பேர் கைது

/

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதங்களில் 116 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதங்களில் 116 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதங்களில் 116 பேர் கைது


ADDED : மே 26, 2025 05:42 AM

Google News

ADDED : மே 26, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தமிழக, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ரூபேஸ்குமார் மீனா, தர்மபுரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை பிரிவில் நேற்று முன்தினம், ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அவர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை, கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன், சேலம் சரக காவல் துறை கண்காணிப்பாளர் வடிவேல், இன்ஸ்பெக்டர் திலகா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கடந்த, 5 மாதங்களில், தர்மபுரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை மூலம், ரேஷன் அரிசி கடத்தியவர்கள் மீது, 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 50.89 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்-திய, 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், 116 பேர் கைது செய்யப்பட்டதுடன், இதில், 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், என தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us