ADDED : ஜூன் 15, 2024 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குஜிலியம்பாறையில் இருந்து பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் சிலும்பா கவுண்டனுார் பிரிவு அருகே புறம்போக்கு நிலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் 28 சென்ட் இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதை அகற்ற முறையாகநோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருந்தும் இடத்தை காலி செய்யாத நிலையில் தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
வாக்குவாதத்திற்கு பின்பு ஆக்கிரமிப்பாளர்களே ஆக்கிரமிப்புகளை மண்அள்ளும் இயந்திரம் கொண்டு அகற்றினார்.