sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விதிமீறல் பயணங்களால் காத்திருக்கு பேராபத்து

/

விதிமீறல் பயணங்களால் காத்திருக்கு பேராபத்து

விதிமீறல் பயணங்களால் காத்திருக்கு பேராபத்து

விதிமீறல் பயணங்களால் காத்திருக்கு பேராபத்து


ADDED : ஜூலை 05, 2024 06:00 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திறக்கப்படாத கழிப்பறை

ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வெளியே அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறை கட்டப்பட்டதிலிருந்து திறக்கப்படாமல் உள்ளது.இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், ஒட்டன்சத்திரம்.

............------சுரங்கப்பாதையில் விபத்து

குளத்துார் லட்சுமணபுரத்திலிருந்து தாடிக்கொம்பு செல்லும் ரோட்டில் ரயில்வே சுரங்க ப்பாதைக்குள் சிமென்ட் தளம் சிதைந்துள்ளதால் டூவீலர்கள் தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். - ராமசந்திரன், வடமதுரை.

..........------

விளக்குகள் எரியாது இருள்

நத்தம் சேர்வீடு பகுதியில் உள்ள நத்தம் -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இரவில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து வாகன விபத்திற்கு வழிவகுக்கிறது. மின் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விஜய், வேலம்பட்டி.

...........-------ஓடையை ஆக்கிரமித்து கட்டடம்

ஆத்துார் தாலுகா அய்யம்பாளையம் - சித்ரேவு ரோட்டில் பூசாரி ஓடையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தனியர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன், அய்யம்பாளையம்.

.....................------

தொடரும் விதிமீறல்கள்

திண்டுக்கல்லில் பிளக்ஸ் போர்டு கட்டும் பிரேம்களை வாகனத்தில் ஏற்றி ரோட்டை மறைத்து கொண்டு செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. யார் மீதும் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளதால் தடுக்க நடவடிக்கை வேண்டும். மோகன், திண்டுக்கல்.

.............------

குப்பையால் சுகாதாரக்கேடு

திண்டுக்கல் பிள்ளையார்பாளையம் காமராஜர் பள்ளி அருகே குப்பை கொட்டி மலைபோல் குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை சிதறி கிடப்பதால் கடந்து செல்வோருக்கு தொற்றுநோய் அபாயம் உள்ளது . பவித்ரா, திண்டுக்கல்.

.........------சாக்கடையில் அடைப்பு

திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது . வியாபாரிகள், குடியிருப்பு மக்கள் பாதிக்கின்றனர் .கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் கனகராஜ், நாகல்நகர்.

.......------






      Dinamalar
      Follow us
      Arattai