sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குழந்தைகளை வளர்க்க, வழக்கை விரைவுபடுத்த கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி தர்ணா

/

குழந்தைகளை வளர்க்க, வழக்கை விரைவுபடுத்த கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி தர்ணா

குழந்தைகளை வளர்க்க, வழக்கை விரைவுபடுத்த கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி தர்ணா

குழந்தைகளை வளர்க்க, வழக்கை விரைவுபடுத்த கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி தர்ணா


ADDED : ஜூலை 23, 2024 02:10 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : மகளை கொலை செய்ததால், பேரன், பேத்தியை வளர்க்கவும், வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகளுடன் முதிய

தம்பதி தர்ணாவில் ஈடுபட்டனர்.

சிவகிரி, எல்.பீ.எஸ்., தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம், 60; தனது மனைவி, பேரன் கோவர்த்தன், பேத்தி கோவர்த்தினி ஆகி-யோருடன், கலெக்டர் அலுவலகம் வந்தார். நுழைவு பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கூறியதாவது:

எனது மகள் கோகிலவாணிக்கும், ஈரோடு சூரம்பட்டி மாரப்பா முதல் வீதியை சேர்ந்த சென்னியப்பனுக்கும் திருமணம் நடந்தது. கோவர்த்தன், கோவர்த்தினி என்ற, இரு குழந்தைகள் உள்ளனர். கடந்தாண்டு செப்.,ல் மகளின் தலையில் கல்லை துாக்கிப்-போட்டு, சென்னியப்பன் கொலை செய்துவிட்டார். இரு குழந்-தைகளை நாங்கள் வளர்க்கிறோம்.

சிறைக்கு சென்ற சென்னியப்பன், இரண்டு மாதங்களில் ஜாமினில் வந்துவிட்டார். எனது மகளை பற்றி தவறாக பேசி வருவதுடன், தனது கடன் பிரச்னை, நாங்கள் மக-ளுக்கு வழங்கிய நகை, பணத்தை மறைத்து விட்டார்.

அவற்றை திரும்ப தர மறுக்கிறார். போலீசாரும் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். முதியவர்களான எங்களால், குழந்தைகளை வளர்க்க இயலவில்லை. இதற்கிடையில், சென்னி-யப்பன், அவரது உறவினர்கள் சிலர் எங்களை மிரட்டி, மகள் இறப்பு குறித்து எதுவும் பேசவும், மனு வழங்கவும் கூடாது என கூறுகின்றனர்.

குழந்தைகளை வளர்க்கவும், திருமணத்தின்போது நாங்கள் வழங்-கிய நகை, பணத்தை திரும்ப தரவும், கொலை குறித்து நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

இதை தொடர்ந்து, அவர்களை போலீசார் சமாதானம் செய்து, கலெக்டரிடம் அழைத்து சென்று மனு வழங்கி அனுப்பி வைத்-தனர்.






      Dinamalar
      Follow us