/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கமிஷனரிடம் வலியுறுத்தல்
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கமிஷனரிடம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மணீஷிடம், மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நேற்று மனு அளித்தனர். அதில் கூறி-யிருப்பதாவது:
மாநகராட்சி, 11வது வார்டு மாணிக்கம்பாளையத்தில், ஊராட்சிக்-கோட்டை கூட்டு குடிநீர் குழாய் இருந்தும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதேபோல் மூன்றாவது வார்டு ஜவுளி நகரில், பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். ௫4வது வார்டில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்-களை சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.