/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராஜஸ்தான் வாலிபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
/
ராஜஸ்தான் வாலிபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
ADDED : ஜூலை 23, 2024 09:06 PM
ஈரோடு:ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோபா ராம், 27; ஈரோடு மாவட்டம், குன்னத்துாரில் வசிக்கிறார். வரப்பாளையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதால், வரப்பாளையம் போலீசார் கைது செய்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்டதால், மோபா ராமை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் மூலம் ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஏற்றுக் கொள்ளவே, மோபா ராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட சிறையில் இருந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.