sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜி.ஹெச்.,ல் கேன்சர் பிரிவு துவக்கம் தினம் 20 பேர் பரிசோதனைக்கு வருகை

/

ஜி.ஹெச்.,ல் கேன்சர் பிரிவு துவக்கம் தினம் 20 பேர் பரிசோதனைக்கு வருகை

ஜி.ஹெச்.,ல் கேன்சர் பிரிவு துவக்கம் தினம் 20 பேர் பரிசோதனைக்கு வருகை

ஜி.ஹெச்.,ல் கேன்சர் பிரிவு துவக்கம் தினம் 20 பேர் பரிசோதனைக்கு வருகை


ADDED : ஜூலை 24, 2024 10:21 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு பன்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில், ஐந்தாம் தளத்தில், 40 படுக்கைகளுடன் கேன்சர் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் கூறியதாவது:

ஈரோடு அரசு மருத்துவமனை, புதிய கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில், 40 படுக்கைகளுடன் கேன்சர் பிரிவு செயல்படுகிறது. டாக்டர் அய்யப்பன் உட்பட, 2 கேன்சர் மருத்துவர்கள் சிகிச்சை வழங்குகின்றனர். ஹீமோ தெரபி சிகிச்சை வழங்கப்படுகிறது. கேன்சர் அறுவை சிகிச்சை செய்யும் வசதி இல்லை. விரைவில், அறுவை சிகிச்சை துவங்கும்.

கேன்சர் பிரிவுக்கு என தனியாக ரேடியோ தெரபி வழங்க, ரேடியோலஜி டாக்டர் நியமிக்கப்படவில்லை. விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பொதுவாக உள்ள ரேடியோலஜி டாக்டர் சிவகுமார் வாயிலாக சிகிச்சைக்கான யோசனை பெறப்படுகிறது. இப்பிரிவு துவங்கிய பின் தினமும், 20 பேர் வரை கேன்சர் பரிசோதனைக்காக வருகின்றனர். அவர்களுக்கு கேன்சர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி தெரிவிக்கிறோம். குறிப்பாக, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் அதிகமாக வருகிறது. அவர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us