/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீ தடுப்பு தன்னார்வலர் ௪௦ பேருக்கு பயிற்சி
/
தீ தடுப்பு தன்னார்வலர் ௪௦ பேருக்கு பயிற்சி
ADDED : ஜூலை 14, 2024 02:17 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்து, இயற்கை சீற்றங்கள் நடக்கும்-போது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் மீட்பு பணியில் ஈடுபவர். அதேநேரம் அந்தந்த பகுதியில் உள்ளவர்கள், தங்களை பாதுகாத்து கொள்வதுடன், வெள்ளம் மற்றும் பேரி-டரில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட வழிமுறைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளித்து வருகின்-றனர். வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி தனியாக வழங்கப்படுகி-றது.
இதன்படி ஈரோடு மாவட்ட அளவில், 11 தீயணைப்பு நிலையங்-களின் அருகே தீ தன்னார்வலர்கள், 40 பேருக்கு பேரிடர் காலங்க-ளான வெள்ளம், பெருந்தீ விபத்து, சாலை விபத்து, வனத்தீ போன்ற சூழலில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து பணி-யாற்றுவது குறித்து நேற்று பயிற்சி அளித்தனர்.