sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளப்போக்கி அமைக்க எதிர்ப்பு; 13ல் போராட்டம்

/

வெள்ளப்போக்கி அமைக்க எதிர்ப்பு; 13ல் போராட்டம்

வெள்ளப்போக்கி அமைக்க எதிர்ப்பு; 13ல் போராட்டம்

வெள்ளப்போக்கி அமைக்க எதிர்ப்பு; 13ல் போராட்டம்


ADDED : மே 10, 2025 01:47 AM

Google News

ADDED : மே 10, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம், 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. வாய்க்கால் நவீன சீரமைப்பு திட்டத்துக்கு விவசாயிகளின் எதிர்ப்பு, ஆதரவால், குறிப்பிட்ட இடங்களில் பணி நடந்து நிறுத்தப்பட்டது.

தற்போது திருப்பூர் மாவட்ட எல்லை, மரவபாளையம் (95/2 மைல்) பகுதியில், அவசர கால வெள்ளப்போக்கி அமைக்க நீர் வளத்துறை அறிவித்தது. இதை எதிர்த்து வரும், 13ல் முத்துார் நீர் வளத்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்த, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. ஈரோடு நீர் வளத்துறை அலுவலகத்தில், நேற்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த அதிகாரிகள், கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டனர். இதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us