sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணத்துக்காக கடத்தல் நடவடிக்கை கோரி மனு

/

பணத்துக்காக கடத்தல் நடவடிக்கை கோரி மனு

பணத்துக்காக கடத்தல் நடவடிக்கை கோரி மனு

பணத்துக்காக கடத்தல் நடவடிக்கை கோரி மனு


ADDED : மே 10, 2025 01:47 AM

Google News

ADDED : மே 10, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம், அவனாயிபுதுார் அருள்குமார், 32; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:

டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து, திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த, 2024ல் ஒட்டன்சத்திரத்தில் மசாஜ் பார்லர் வைக்க, கரூர் வீரக்குமார் என்பவரிடம், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். இதற்காக, 2 பிராமிசரி நோட்டு, வங்கி காசோலை வழங்கினேன். அரசின் அனுமதி கிடைக்காததால் அதை மூடிவிட்டு, பெருந்துறை சிப்காட்டில் ஒருவருக்கு, கார் டிரைவராக பணி செய்கிறேன். கடந்த, 3ம் தேதி எனக்கு கடன் தந்த வீரக்குமார் உட்பட சிலர் காரில் வந்து, வட்டி, கடன் தொகை வழங்கியதுபோக கூடுதலாக, மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டினர். தொடர்ந்து எனது மற்றும் மனைவியின் பெற்றோரை மிரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us