/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜம்பை முருகன் கோவில் கும்பாபிஷேகம்
/
ஜம்பை முருகன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 13, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர்: மலையடி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மணலூர்பேட்டை அடுத்த ஜம்பை கிராமத்தில் செங்குந்த முதலியார் சமூகத்தினர் மற்றும் கிராம பொது மக்களால் புதிதாக கட்டப்பட்ட மலையடி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருமுறைகள் ஓதி, தமிழால் மந்திரங்கள் ஓதப்பட்டு, காலை 7:30 மணிக்கு விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.