/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை
/
கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை
ADDED : ஜூலை 13, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை அருகே கடன் பிரச்னையால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 48; கூலி தொழிலாளி. இவர், கடன் பிரச்சினையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை எலவனாசூர் கோட்டை அடுத்த ஏ.புத்தூர் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எலவனாசூர் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.