ADDED : ஜூலை 16, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் காமாட்சி அம்மன் சமேத கெங்காதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காப்பு கடும் நிகழ்ச்சி நடந்தது. பின், காமாட்சி அம்மன், கெங்காதீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சுவாமிகளுக்கு திருக்கல்யாணத்தை வேத வெங்கடேசன், கணேஷ் குருக்கள் நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.