/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கும்பாபிஷேகத்தில் 7 சவரன் செயின் பறிப்பு
/
கும்பாபிஷேகத்தில் 7 சவரன் செயின் பறிப்பு
ADDED : செப் 18, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கீழ்தணியாலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மனைவி பத்மாவதி, 50; இவர், கடந்த 4ம் தேதி திருநாவலுார் சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது, கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலி செயின் பறிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருநாவலுார் போலீசில் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.