/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புகுந்த பாம்பு
/
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புகுந்த பாம்பு
ADDED : ஜூலை 05, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கு உள்ளது. கூட்ட அரங்கை நேற்று காலை 9:00 மணிக்கு, ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, கூட்ட அரங்கிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, 4 அடி சாரை பாம்பை பிடித்து, காப்புக்காட்டில் விட்டனர்.