/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெரும்பாக்கம் போலீசார் சார்பில் இலவச கராத்தே பயிற்சி துவக்கம்
/
பெரும்பாக்கம் போலீசார் சார்பில் இலவச கராத்தே பயிற்சி துவக்கம்
பெரும்பாக்கம் போலீசார் சார்பில் இலவச கராத்தே பயிற்சி துவக்கம்
பெரும்பாக்கம் போலீசார் சார்பில் இலவச கராத்தே பயிற்சி துவக்கம்
ADDED : ஜூன் 10, 2024 04:53 AM

சென்னை : பெரும்பாக்கம் காவல் நிலையம் சார்பில், மாணவ - மாணவியருக்கு கராத்தே கற்றுக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முதல் நாள் பயிற்சி, பெரும்பாக்கம் லைட் ஹவுஸ் குடியிருப்பு வளாகத்தில், நேற்று நடந்தது.
இதில், 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும், 75 பேர் பங்கேற்றனர். பெரும்பாலானோர் மாணவியர். கராத்தே பயிற்சியை தலைமைக் காவலர் காமராஜ், கற்றுக் கொடுத்தார்.
போலீஸ்காரர் காமராஜ் கூறியதாவது:
தற்காப்பு கலையாகவும், போட்டியில் பங்கேற்கும் விதமாகவும் கராத்தே உள்ளதால், மாணவ - மாணவியர் ஆர்வமாக பங்கேற்றனர். மாணவியர் பங்கேற்பு அதிகமாக இருப்பது வரவேற்கத்தக்கது. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இரண்டு மணி நேரம் இலவசமாக பயிற்சி வழங்குகிறோம்.
மூன்று மாதம் முறையாக வந்தால், அடிப்படை கராத்தே கற்றுக் கொள்ள முடியும். மாணவ - மாணவியர் ஆர்வத்தை பொறுத்து, அவர்கள் விரும்பும் வகையில் பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.