sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலிபரை நிர்வாணமாக்கி நகை பறித்த இருவர் சிக்கினர்

/

வாலிபரை நிர்வாணமாக்கி நகை பறித்த இருவர் சிக்கினர்

வாலிபரை நிர்வாணமாக்கி நகை பறித்த இருவர் சிக்கினர்

வாலிபரை நிர்வாணமாக்கி நகை பறித்த இருவர் சிக்கினர்


ADDED : ஜூன் 10, 2024 04:52 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, : அடையார், சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 36; திருமண அலங்காரம், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 2021ல், சென்னையில் உள்ள சொகுசு ேஹாட்டலுக்கு இவர் சென்றபோது, அங்கு வேலை செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதே ஆண்டு ஜூலை 7ம் தேதி, அந்த பெண் தன் குடும்ப கஷ்டத்தை கூறி செந்தில் குமாரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

பணம் கொடுக்க, ஆவடி அடுத்த அண்ணா நகர், லட்சுமி நகரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு செந்தில் குமார் சென்றுள்ளார். வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

திடீரென அங்கு வந்த நான்கு பேர் கும்பல், அந்த பெண்ணை காரில் ஏற்றி அனுப்பினர். பின், செந்தில் குமாரை நிர்வாணமாக்கி, சரமாரியாக தாக்கி 15 சவரன் நகை மற்றும் 13,000 ரூபாய் பறித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து, கண்ணை கட்டி அவரை காரில் கடத்தி, முடிச்சூரில் தள்ளிவிட்டு தப்பினர்.

இதுகுறித்து விசாரித்த ஆவடி போலீசார், இருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முகப்பேர், ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த அமீனா, 23, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பெத்தேர் ஹசில், 31, ஆகியோரை, ஆவடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us