sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஜெயேந்திரர் 90வது ஜெயந்தி விழா காஞ்சி சங்கரமடத்தில் விமரிசை

/

ஜெயேந்திரர் 90வது ஜெயந்தி விழா காஞ்சி சங்கரமடத்தில் விமரிசை

ஜெயேந்திரர் 90வது ஜெயந்தி விழா காஞ்சி சங்கரமடத்தில் விமரிசை

ஜெயேந்திரர் 90வது ஜெயந்தி விழா காஞ்சி சங்கரமடத்தில் விமரிசை


ADDED : ஜூலை 23, 2024 11:25 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமகோடி பீடம், சங்கரமடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் 90வது ஜெயந்தி மஹோத்ஸவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நேற்று விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் சங்கரமடத்தின், 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆக்ஞைப்படி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், நேற்று, காலை 8:00 மணிக்கு சதுர்வேத பாராயணம், ஏகாதச ருத்ரம், ஹோமம், ஜபம் வேத பாக் ஷ்ய ஸதஸ் மற்றும் விசேஷ அபிேஷக ஆராதனையை தொடர்ந்து, மலர் அலங்காரம் நடந்தது.

மாலை 4:35 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும், நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடந்தது, இரவு 7:00 மணிக்கு நலிந்த கிராமப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

இரவு 7:30 மணிக்கு ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் தங்க ரத ஊர்வலம் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சி சங்கரமடம் ஸ்ரீகார்யம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி செய்திருந்தார்.

முன்னதாக, காஞ்சி காமகோடி வித்யா மண்டலி சார்பில் 108 பெண்கள் சங்கரமடத்தில், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தின் அருகில் இருந்து, 108 பெண்கள் பால்குடங்களுடன் காமாட்சி அம்மன் கோவிலுக்கு மங்கல வாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து, நவராத்திரி கொலு மண்டபத்தில் 108 சுமங்கலிகளுக்கும் புடவை மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சக்கான ஏற்பாட்டை காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேச அய்யர், மணியக்காரர் சூரிய நாராயணன், கோவில் ஸ்தானிகர் நடராஜ சாஸ்திரிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மதியம், ஜெயேந்திரர் ப்ளாட்டினம் ஜூப்ளி டிரஸ்ட் மற்றும் காஞ்சி காமாட்சி சங்கர மடம் வரவேற்பு குழு சார்பில், சங்கரமடம் நுழைவாயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us