/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விபத்தில் கனரா வங்கி மேலாளர் பலி
/
விபத்தில் கனரா வங்கி மேலாளர் பலி
ADDED : செப் 15, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்;சுங்குவார்சத்திரம் அருகே, பைக் மீது லாரி மோதிய விபத்தில் வங்கி மேலாளர் உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, நெமிலியைச் சேர்ந்தவர் யுவசங்கர், 32; பேரம்பாக்கம் அருகே, துளசாபுரத்தில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று காலை, 'சுசூகி ஜிக்ஸர்' பைக்கில் வீட்டில் இருந்து வங்கிக்கு புறப்பட்டார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுங்சாலையில், சுங்குவார்சத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே, இடது புறம் சர்வீஸ் சாலையில் திருப்பிய போது, பின்னால் வந்த லாரி மோதியது.
இதில், யுவசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.