sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நிலம் அளவிடும் பணிக்கு ஆரம்பாக்கத்தில் எதிர்ப்பு

/

நிலம் அளவிடும் பணிக்கு ஆரம்பாக்கத்தில் எதிர்ப்பு

நிலம் அளவிடும் பணிக்கு ஆரம்பாக்கத்தில் எதிர்ப்பு

நிலம் அளவிடும் பணிக்கு ஆரம்பாக்கத்தில் எதிர்ப்பு


ADDED : ஜூன் 18, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:குன்றத்துார் ஒன்றியம், படப்பை அருகே செரப்பணஞ்சேரி ஊராட்சி, ஆரம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என, 39 நபர்களுக்கு, தலா 2 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ஆரம்பாக்கம் கிராமத்தில் நிலம் அளவிடும் பணியில், வருவாய் துறையினர் நேற்று ஈடுபட்டனர்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள், 30க்கும் மேற்பட்டோர் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

இதையடுத்து, நிலம் அளவிடும் பணி நடந்தது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us