/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கறவை மாடுகளுக்கு தோல் நோய் தடுப்பூசி
/
கறவை மாடுகளுக்கு தோல் நோய் தடுப்பூசி
ADDED : செப் 16, 2025 12:11 AM

காஞ்சிபுரம்;காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், கறவை மாடுகளுக்கு தோல் நோய் தடுப்பூசி போடும் பணியை, நேற்று முதல் கால்நடை துறையினர் துவக்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, 1.69 லட்சம் கறவை மாடுகள் உட்பட, பன்றிகள், செம்மறியாடு, வெள்ளாடு, நாய்கள், கோழிகள் என மொத்தம், 4.10 லட்சம் கால்நடைகள் உள்ளன.
இதில், கறவை மாடுகளுக்கு, தோல் மூலமாக பரவும் நோய் தடுப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என, கால்நடை துறை உத்தரவிட்டது.
அதன்படி, கோவிந்தவாடி குறு வட்டத்தைச் சேர்ந்த கம்மவார்பாளையம் கால்நடை மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இருக்கும், கோவிந்தவாடி, படுநெல்லி, கம்மவார்பாளையம் கிராமங்களில், கால்நடை உதவியாளர் மற்றும் ஆய்வாளர்கள், கறவை மாடுகளுக்கு நேற்று முதல் தோல் நோய் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.