/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடி பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை
/
ஆடி பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை
ADDED : ஜூலை 22, 2024 08:47 AM
கரூர், : ஆடி மாத பவுர்ணமியையொட்டி, க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், உப்புப்பாளையம் வெள்ளதாரையில் வீரமாத்தியம்மன் கோவிலில், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னி-மார்களான அபிராமி, மகேஸ்வரி, கவ்மாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்-கிறது.
அதன்படி, நேற்று ஆடி பவுர்ணமியையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்-சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்-காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பா-லித்தார். இதேபோல் குப்பம் காளியம்மன், க.பர-மத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் சித்தர் பீட கோவில், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன், அத்திப்பாளையம் பொன்னாட்சி-யம்மன் ஆகிய கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.