sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

/

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்


ADDED : ஜூலை 13, 2024 08:18 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ஆனி திருமஞ்சனத்தையொட்டி, ப.வேலுார், சுல்தான்பேட்டை திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நேற்று நடராஜருக்கு அபி-ஷேகம் நடந்தது.காலை, 8:00 மணிக்கு தொடங்கி, மதியம், 12:00 மணி வரை தேவாரம், திருவாசகத்துடன், 16 வகையான திரவியங்களால் அபி-ஷேகம் நடந்தது.

மதியம், 1:00 மணிக்கு சிவகாமி அம்பாள் தங்க கவசத்திலும், நடராஜ பெருமான் வெள்ளி கவசத்திலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட சிவனடியார்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருமஞ்சன பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மடம் நிர்வாகி ராமலிங்கம் மற்றும் சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us