நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : குளித்தலை அடுத்த ராஜேந்திரம் கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோவில் அமைந்துள்-ளது.
இக்கோவில் திருவிழாவையொட்டி, பக்-தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்த குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, மாரியம்மன், காளியம்ம-னுக்கு பாலபிஷேகம் நடந்தது. மதியம், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, மாவி-ளக்கு ஊர்வலம் நடந்தது. இதேபோல், ராஜேந்-திரம் பஞ்., பட்டவர்த்தி கிராமத்தில் உள்ள மாரி-யம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் நடந்தது.