/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
/
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 01, 2024 02:02 AM
கிருஷ்ணகிரி;பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் கோவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், ஜூன் இரண்டாவது வாரத்தில் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேரலாம். தமிழ்வழி கல்வியில் நேர்முக பயிற்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும். கல்வி கட்டணம், 25,000 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய்.
இந்த படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்து கடை, விதை கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளராகலாம். விபரம் பெற முதன்மை அலுவலர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம், உதவி பேராசிரியர் கோவிந்தன், 99422 79190, 73390 02390, 95007 71299, மற்றும் இயக்குனர் திறந்த வெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோவை - 641 003, ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்
லட்சுமி, 0422-6611229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.