sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அர்ச்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

/

அர்ச்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

அர்ச்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

அர்ச்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி


ADDED : மே 27, 2025 01:55 AM

Google News

ADDED : மே 27, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை சென்னை சாலையிலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த மகோத்சவ திருவிழா கடந்த, 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை, திருமல்வாடி லட்சுமணனின் மகாபாரத விரிவுரை, பழையபேட்டை கவியாளர் பொன்னுசாமியின் மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. மேலும், அவதானப்பட்டி கலைவாணி நாடக சபா குழுவினர் சார்பில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, திரவுபதி திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம் உள்ளிட்ட இதிகாச, மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இதில், கவுரவர்களை கூண்டோடு அழிக்க, சிவபெருமானிடம் பாசுபதம் பெற வேண்டி அர்சுணன், தபசு மரத்தின் கீழ், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்தபின், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், பல்வேறு கிராமங்களிலிருந்து வந்த மக்கள் அம்மனை தரிசனம் செய்து, தபசு மரத்தை சுற்றிலும் குப்புற படுத்துக் கொண்டனர். அர்சுணன் வேடமணிந்தவர் அவர்களுக்கிடையே நடந்து சென்று ஆசி வழங்கினார்.

பின்னர் அர்ச்சுணன் வேடமணிந்தவர், தபசு மரம் ஏறினார். தபசு மரத்தின் மேல் இருந்து, அவர் துாவிய பொரியை பெண்கள் மடியில் ஏந்திக் கொண்டனர். விழா ஏற்பாடுகளை, பாப்பாரப்பட்டி, தொன்னைகான் கொட்டாய், சவுளூர், பாறையூர், தண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்கவுண்டர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us