/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ADDED : செப் 29, 2025 07:27 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்-குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்-டத்தில், நகர் பகுதியில், 55 முகாம்களும், ஊரக பகுதிகளில், 173 முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இதில், 3ம் கட்ட முகாம் கடந்த, 16ம் தேதி துவங்-கியுள்ளது. வரும், 14ம் தேதி வரை மொத்தம், 72 முகாம்கள் நடக்க உள்ளன. நாளை (செப்.30) காலை ஓசூர் ஒன்றியம், அச்செட்டிப்பள்ளி பஞ்.,க்கு, அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது.
அதேபோல், கெலமங்கலம் ஒன்றியம், ஊடே-துர்க்கம், நாகமங்கலம் பஞ்.,க்களுக்கு, நாகமங்-கலம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ண-கிரி ஒன்றியம், அகசிப்பள்ளி பஞ்.,க்கு, கிட்டம்-பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மத்துார் ஒன்றியம், வாலிப்பட்டி, எட்டிப்-பட்டி பஞ்.,க்களுக்கு, பெரமனுார் சமுதாய கூடத்-திலும், காவேரிப்பட்டணம் ஒன்றியம், பாரூர், செல்லக்குட்டப்பட்டி பஞ்.,க்களுக்கு பாரூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், சூளகிரி ஒன்றியம், புக்கசாகரம், தோரிப்பள்ளி பஞ்.,க்களுக்கு புக்கசாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

