/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்
/
வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்
ADDED : ஜூன் 21, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசரிபேட்டையை சேர்ந்தவர் காந்தி மகள் ரேஷ்மி, 19. கடந்த, 18ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி
வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர், 18 வயது சிறுவன்; ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். கடந்த, 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு நிறுவனத்திலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் மிதாலி ராய், 29, புகார்படி, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.