sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை சிறுவர் பூங்காவில் சட்டவிரோத கட்டுமானம் கமிஷனர் ஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மதுரை சிறுவர் பூங்காவில் சட்டவிரோத கட்டுமானம் கமிஷனர் ஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை சிறுவர் பூங்காவில் சட்டவிரோத கட்டுமானம் கமிஷனர் ஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை சிறுவர் பூங்காவில் சட்டவிரோத கட்டுமானம் கமிஷனர் ஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூன் 29, 2024 04:42 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கே.கே.நகர் சிறுவர் பூங்காவில் சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் பொழிலன் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை கே.கே.நகரில் ஏ.ஆர்., நினைவு சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. விழாக்கள் நடத்துகின்றனர். சமையல் செய்கின்றனர். அனுமதியின்றி ஒலி பெருக்கி பயன்படுத்துகின்றனர். அருகில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுகிறது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் குவிக்கப்படுகின்றன. சிறுவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. மரங்கள் சேதமடைந்துள்ளளன. மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவை மேம்படுத்த மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மாநகராட்சி கமிஷனர் உடனடியாக பூங்காவை ஆய்வு செய்ய வேண்டும். மொத்த பரப்பளவு எவ்வளவு, சட்டவிரோதமாக விதிமீறல் கட்டடங்களை அமைத்தவர்கள் யார், அவற்றை பயன்படுத்துவோர் யார், பூங்காவை பழைய நிலைக்கு கொண்டுவர எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது விபரங்களை அறிக்கையாக ஜூலை 4 ல் தாக்கல் செய்ய வேண்டும். விதிமீறல் உறுதியாகும்பட்சத்தில் கண்டு கொள்ளாத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us