sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கழிவுநீர் கால்வாயான பாசன கால்வாய்

/

கழிவுநீர் கால்வாயான பாசன கால்வாய்

கழிவுநீர் கால்வாயான பாசன கால்வாய்

கழிவுநீர் கால்வாயான பாசன கால்வாய்


ADDED : செப் 16, 2025 04:39 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுார் பெரியாறு பாசன கால்வாயில் வீடு, நகராட்சி கழிப்பறை தண்ணீர் கலப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கள்ளந்திரி முதல் குறிச்சிபட்டி வரை 12 வது பிரதான கால்வாய் வழியாக பெரியாறு ஒரு போக பாசன கால்வாய் தண்ணீர் செல்கிறது. இதில் நொண்டி கோவில் பட்டியில் பிரியும் 6வது கால்வாய் கொட்டகுடிக்கும், மார்க்கெட் அருகே பிரியும் 6ஏ கால்வாய் வண்ணாம்புறை பட்டி வரையும் செல்கிறது.

இக் கால்வாயில் செல்லும் தண்ணீரால் பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிறைந்து அதன் மூலம் 1200 ஏக்கர் பயன்பெறும். இதில் நகராட்சியில் பல பகுதிகளிலிருந்து கழிவு நீர் கலப்பதால் சுகாதாரம் சுத்தமாக கிடையாது.

விவசாயி ஸ்டாலின் கூறியதாவது:

பெரியாற்றுக்கால்வாய் அருகில் குடியிருப்பவர்கள் வீட்டு கழிவு மற்றும் செப்டிக் டேங்க் தண்ணீரையும், நகராட்சி கழிப்பறைகளின் கழிவு நீரையும் குழாய் மூலம் கால்வாயில் வெளியேறுமாறு அமைத்துள்ளனர். அதனால் தண்ணீர் நிறம் கருப்பாகவும், துர்நாற்றமாகவும், கழிவுகள் நிறைந்தும் உள்ளது. கால்வாயில் வரும் தண்ணீரை கண்மாய் மற்றும் வயல்களுக்கு பாய்ச்சுவதால் மகசூல் குறைவதோடு, விளைவிக்கக்கூடிய நெல்லும் ஆரோக்கியமற்றதாக கிடைக்கும் என்பதால் நகராட்சி மற்றும் நீர்வளத் துறையினர் இணைந்து கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், கால்வாயில் கழிவுநீர் கலப்பதை நிறுத்தகோரி நகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதி யுள்ளேன் என்றார்.






      Dinamalar
      Follow us