sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விலை சரிவால் உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்

/

விலை சரிவால் உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்

விலை சரிவால் உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்

விலை சரிவால் உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்


ADDED : ஜன 17, 2024 07:05 AM

Google News

ADDED : ஜன 17, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : நோய் தாக்குதல் மற்றும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, வெங்காய விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பேரையூர் பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தவக்காய் நோய் தாக்கியதால் வெங்காய விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. நோயால் பாதித்த பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்யாமல் உழவடை செய்து வருகின்றனர். சில விவசாயிகளே அறுவடை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெங்காயம் விலை சரிவை சந்தித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, கிலோ ரூ.100 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது மிகமிக குறைவாக ரூ.15க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயிகள் கூறுகையில், 'விதை வெங்காயம் கிலோ ரூ.80 க்கு வாங்கினோம். விதைப்பு முதல் அறுவடை வரை, சின்ன வெங்காயம் சாகுபடிக்கு ரூ. ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகிறது.

விதைக்கும் போது, ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 க்கு விற்றது. தற்போது ரூ.15 க்கு கொள்முதலாவதால் ரூ.80 ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது'' என்றனர்.






      Dinamalar
      Follow us