sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோலைமலையில் வைகாசி திருவிழா

/

சோலைமலையில் வைகாசி திருவிழா

சோலைமலையில் வைகாசி திருவிழா

சோலைமலையில் வைகாசி திருவிழா


ADDED : மே 29, 2025 01:52 AM

Google News

ADDED : மே 29, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்ஸவத் திருவிழா மே 31ல் துவங்கி ஜூன் 9 வரை நடக்கிறது.

முதல் நாள் காலை 10:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. தினமும் காலை 11:00 மணிக்கு சண்முகார்ச்சனை, மதியம் 3:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மஹா அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு சுவாமி புறப்பாடு, 6:00 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது.

விழாவின் முக்கிய தினமான வைகாசி விசாக தினத்தன்று (ஜூன் 9) காலை 8:00 மணிக்கு சண்முகார்ச்சனை, 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மஹா அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

மதியம் 3:00 மணிக்கு அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு சுவாமி புறப்பாடு, 6:00 மணிக்கு மஹா தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

சோழவந்தான்


சோழவந்தான் அருகே தென்கரையில் உச்சி மாகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் (மே 27) தொடங்கியது.

கிராமத்தார்கள் சார்பாக செவ்வாய் சாற்றப்பட்டு, கொடியேற்றப்பட்டது.அம்மன் சிம்ம வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் அமுதா, கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us