ADDED : ஜூன் 27, 2024 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி : நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் கோமதி ஆணைப்படி, கோத்தகிரி கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சர்வதேச போதைப் பொருள் உறுதிமொழி எடுக்கபட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். சோலுார்மட்டம் காவல் நிலைய போலீசார் வினோத் மற்றும் ராஜலிங்கம் ஆகியோர், மாணவ மாணவியருக்கு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வழங்கி, உறுதிமொழி எடுத்தனர். அதில், ஆசிரியர்கள் பாலசுப்ரமணி, ரெனிதா பிரபாவதி, ரஞ்சிதா மற்றும் பிரியா உட்பட, மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை கீதாமணி நன்றி கூறினார்.