sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வளர்ச்சி பணி மேற்கொள்ள தடை; அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்

/

வளர்ச்சி பணி மேற்கொள்ள தடை; அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்

வளர்ச்சி பணி மேற்கொள்ள தடை; அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்

வளர்ச்சி பணி மேற்கொள்ள தடை; அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : ஜூன் 27, 2024 09:22 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : ஜெகதளாவில் வார்டு பணிகளை செய்ய கோரி அதிகாரியை மக்கள் முற்றுகையிட்டனர்.

ஜெகதளா பேரூராட்சி, 11வது வார்டில், சுற்றுலாத்துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில், எஸ்.ஏ.டி.பி., நிதியின் கீழ் கழிவு நீர் கால்வாய், நடைபாதை அமைக்க, 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய பிப்., மாதம் டெண்டர் விடப்பட்டது.

ஆனால், பணிகள் நடைபெறாத நிலையில், தேர்தல் முடிந்ததும் பணி துவங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல, கரிமொரா காலனி நடைபாதை பணியும் துவங்கவில்லை.

இது தொடர்பாக, குன்னுாரில் நடந்த 'உங்களை தேடி உங்கள் ஊரில் ' திட்டத்திற்கு வருகை தந்த கலெக்டர் உட்பட அதிகாரிகளிடம், 'பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது சகோதரர் செயல் அலுவலரை மிரட்டி பணியை நிறுத்தி வைத்துள்ளனர்,' என, வார்டு கவுன்சிலர் பிரமிளா புகார் தெரிவித்து மனு கொடுத்தார்.

இந்நிலையில், நேற்று கலெக்டர் உத்தரவால் பஞ்., அலுவலகம் வந்த பஞ்சாயத்து இணை இயக்குனரை மக்கள் முற்றுகையிட்டு வளர்ச்சி பணிகளை துவங்க வலியுறுத்தினர். அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டு நாட்களில் பணிகள் துவக்கப்படும்,' என்றனர். 'பணிகள் துவங்காவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,' என, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us