/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பீக் ஹவர்சில்' நகரில் கனரக வாகனங்கள் நுழைய தடை
/
'பீக் ஹவர்சில்' நகரில் கனரக வாகனங்கள் நுழைய தடை
ADDED : ஜூன் 10, 2024 12:21 AM
கூடலுார்;கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால், 'பீக் ஹவர்' நேரமான காலை, 8:30 முதல் 9:30 வரை, கூடலுார் நகரில் கனரக வாகனங்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.
கூடலுார் நகர பகுதியில், மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, 'பீக் ஹவரில்' நகரில் கனரக வாகனங்கள் நுழைய போலீசார் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
கோடை விடுமுறை காரணமாக கடந்த இரண்டு மாதம் இந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்தது. தற்போது, கோடை விடுமுறைக்கு பின், இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரமான, காலை, 8:30 மணி முதல் 9:30 மணி வரை, நகரில் கனரக வாகனங்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'பள்ளி செயல்படும் நாட்களில் காலை, 8:30 மணி முதல் 9:30 மணி வரை நகரில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பந்தலுார், கேரளாவில் இருந்து கூடலுார் வரும் கனரக வாகனங்கள் கோழிக்கோடு சாலை இரும்புபாலம் பகுதியில்; கர்நாடகாவிலிருந்து வரும் வாகனங்கள், மைசூரு தேசிய நெடுஞ்சாலை மார்க்க மூலா பகுதிகளில் நிறுத்த வேண்டும்,' என்றனர்.