/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம் துவக்கம்
/
சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம் துவக்கம்
ADDED : பிப் 05, 2024 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுாரில், சி.ஐ.டி.யு., சுமை துாக்கும் தொழிலாளர்கள் சங்க துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நிர்வாகி மணிகண்டன் தலைமை வகித்தார். ரஷீத் ஷாஜி, ஜெம்சித் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசின் திட்டங்களை பெறுவது குறித்து விளக்கம் அளித்தார்.
நிர்வாகி சக்திவேல் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். அதில், சுமை துாக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் வினு, கண்ணன், சரண்ராஜ், ரவிக்குமார், கபீர், ராஜா, அபு, சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.