sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுங்கத்துறை ரோந்துப்படகு ராமேஸ்வரத்தில் வீணானது

/

சுங்கத்துறை ரோந்துப்படகு ராமேஸ்வரத்தில் வீணானது

சுங்கத்துறை ரோந்துப்படகு ராமேஸ்வரத்தில் வீணானது

சுங்கத்துறை ரோந்துப்படகு ராமேஸ்வரத்தில் வீணானது


ADDED : ஜூன் 26, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் சுங்கத்துறை ரோந்துப் படகு பயன்படுத்தாமல் சேதமடைந்து முடங்கியதால் மத்திய அரசுக்கு ரூ.20 லட்சம் வீணானது.

இலங்கை -ராமேஸ்வரம் இடையே தங்க கட்டிகள் கடத்தி வருவதையும், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் கடத்திச் செல்வதை தடுக்கவும் 5 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் சுங்கத்துறைக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் ரோந்து படகு வழங்கப்பட்டது.

இதில் உள்ள இரு அதிவேக இன்ஜின் மூலம் மணிக்கு 60 முதல் 80 கி.மீ., வேகத்தில் கடலில் சென்று கடத்தல் காரர்களை எளிதில் பிடிக்கலாம்.6 சுங்கத்துறை சிப்பாய்கள் அமரும் இருக்கை வசதியும் உள்ளது.

ஆனால் இந்த ரோந்து படகில் 10 சதவீதம் கூட சுங்கத்துறையினர் பணியில் ஈடுபடாமல் ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படையின் பாலத்தில் பல மாதங்களாக நிறுத்தி வைத்து அழகு பார்த்தனர். இதனால் சூறாவளியால் கடல் கொந்தளிப்பு, வெயில், மழையில் இன்ஜின் பழுதாகி, படகு பயனின்றி சேதமடைந்து முடங்கியது. இதனையடுத்து ரோந்து படகை கடற்கரை மேலே சுங்கத்துறையினர் ஏற்றி வைத்து பழுதான இன்ஜினையும் மூடி வைத்தனர். இதன் காரணமாக மத்திய அரசுக்கு ரூ. 20 லட்சம் வீணாகிப் போனது.






      Dinamalar
      Follow us