sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வரத்து கால்வாயில் புதர் மண்டியதால் வயலுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

/

வரத்து கால்வாயில் புதர் மண்டியதால் வயலுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

வரத்து கால்வாயில் புதர் மண்டியதால் வயலுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

வரத்து கால்வாயில் புதர் மண்டியதால் வயலுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்


ADDED : மே 26, 2025 02:03 AM

Google News

ADDED : மே 26, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பேரையூர் பெரிய கண்மாயிலிருந்து எஸ்.பி.கோட்டை கண்மாய்க்கு செல்லும் வரத்துக்கால்வாயில் கழிவுநீர் தேங்கி நாணல் செடிகள் வளர்ந்து புதர்மண்டி இருப்பதால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாயத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

கமுதி அருகே பேரையூர் பெரிய கண்மாயில் இருந்து எஸ்.பி.கோட்டை, இலந்தைகுளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக வரத்துக்கால்வாய் வசதி உள்ளது.

இங்கு பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் பேரையூர் அரசு கால்நடை மருத்துவமனை அருகே செல்லும் வரத்துக்கால்வாயில் கழிவுநீர் தேங்கி நாணல்செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால் பருவமழை காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வரத்து கால்வாய் சுருங்கியும் துார்வாரப்படாமல் உள்ளது.

எனவே இந்த கோடை காலத்தை கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக நாணல் செடிகளை அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us