sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வரதராஜ பெருமாள் கோயிலுக்கு திரும்பினார்

/

வரதராஜ பெருமாள் கோயிலுக்கு திரும்பினார்

வரதராஜ பெருமாள் கோயிலுக்கு திரும்பினார்

வரதராஜ பெருமாள் கோயிலுக்கு திரும்பினார்


ADDED : ஜூன் 17, 2025 06:32 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் நேற்று காலை பெருமாள் கோயிலுக்கு திரும்பினார்.

எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான வரதராஜ பெருமாள் கோயில் 118 வது வைகாசி வசந்த உற்ஸவ விழா நடக்கிறது. ஜூன் 11 காலை வைகை ஆற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் இறங்கிய பெருமாள் தொடர்ந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி நகர் வலம் வந்தார்.

பின்னர் மண்டூக மகரிஷிக்கு காட்சி அளித்தும், தினமும் இரவு அவதார காட்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி களைந்த மாலை கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டது.

பின்னர் பூப்பல்லக்கில் அமர்ந்த பெருமாள் இரவு 10:30 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து கரையேறினார். விடிய விடிய நகர் உலா வந்த பெருமாள் நேற்று காலை 10:00 மணிக்கு மீண்டும் கோயிலை அடைந்தார். இரவு கண்ணாடி சேவை நடந்தது.

இன்று காலை உற்ஸவ சாந்தி விழாவையொட்டி அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. நாளை கருட வாகன சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us